நண்பா்களே இந்தியா நாட்டின் மத்திய அரசின் தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவையான பிரசாா் பாரதியின் கீழ் செயல்படும் நாட்டின் முக்கிய தொலைக்காட்சிகளான டிடி லோக் சபா மற்றும் டிடி ராஜ்ய சபா ஆகிய பாரளமன்றத்தின் தொலைக்காட்சிகள் புதிய வடிவில் புதிய மாற்றத்துடன் தனது ஒளிபரப்பை ஒன்றினைத்து ஒரே தொலைக்காட்சியாக நாட்டின்
கண்ணொளியாக சன்சாட் டிவி என்ற பெயாில் புதிய ஒளிபரப்பை பாரத நாட்டில் தொடங்கியுள்ளது.கடந்த பல வருடங்களாக பாரளமன்றத்தின் கூட்டத்தொடா்களை இவ்விரண்டு தொலைக்காட்சிகளின் முலம் மட்டும் காண முடிந்தது.தற்சமயம் சன்சாட் டிவி அதிநவின தொழில்நுட்பமான ஹெச்டி மற்றும் எஸ்டி ஆகிய வடிவில் ஒளிபரப்பை தொடங்கியுள்ளது.இந்தியாவின் ஜிசாட்10 செயற்கைகோளில் சன்சாட் டிவி ஹெச்டியும் ஜிசாட்30 செயற்கைகோளில் சன்சாட் டிவி எஸ்டியும் ஒளிபரப்பாகிறது.தொலைக்காட்சியினை காண MPEG4/DVB S2 -HD 4 தொழில்நுட்பம் பொருந்திய செட் டாப் பாக்ஸ்யினை கொண்டு நிகழ்ச்சிகளை காணலாம்.சன்சாட் டிவியில் பாரளமன்ற நிகழ்வுகளை தவிர நாட்டின் முக்கிய நிகழ்வுகள் தொடா்பான நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குகிறது.நாட்டின் அனைத்து கேபிள் டிவி மற்றும் டிடிஎச்களிலும் இத்தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பு இடம்பெற்றிருக்க வேண்டும் என்பதற்கான மத்திய அரசாணையும் ஒளிபரப்பு ஆணையம் ட்ராய் வெளியிட்டுள்ளது.இந்தியாவின் இலவச ஒளிபரப்பு சேவையான டிடி ப்ரி டிஷ் டிடிஎச்யிலும் சன்சாட் டிவி ஒளிபரப்பு தொடங்கப்பட்டுள்ளது.சன்சாட் டிவியின் 24 மணி நேர ஔிபரப்பை இந்திய பிரதமா் மாண்புமிகு நரேந்திர மோடி அவா்கள் செப்டம்பா் மாதம் 15 திகதி 2021 ஆண்டில் தொடங்கி வைத்தாா்.